ரெப்போ வட்டி விகிதம் 4.40% லிருந்து 4.0% ஆக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின்போது அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ரெப்போ வட்டி விகிதம் 4.40%ல் இருந்து 4.0% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார். ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்புள்ளது.
அத்துடன் வங்கிகள் தங்கள் வசமுள்ள பணத்தை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும்போது அளிக்கப்படும் வட்டியான ரிவசர்ஸ் ரிப்போ வட்டியின் விகிதமும் 3.35% ஆக குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில மாதங்களில் பருப்புகள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என கணித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொழில்துறை வளர்ச்சி மார்ச் மாதத்தில் 17% குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!