தடுப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு உள்ளே நுழைந்த தொழிலாளர்கள் - வைரல் வீடியோ
உத்தரப் பிரதேச - மத்தியப் பிரதேசம் இடையிலான எல்லையிலுள்ள தடுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு நுழையும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த ஒரு காணொளி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் உள்ளிட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்தே, தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவும், மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் மூலம் பயணித்து வருகின்றனர்.
இதனையடுத்து அவர்களைச் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்புவதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்தச் சிறப்பு ரயில்களின் சேவை பெரும்பான்மையான வெளிமாநிலத்தவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
#WATCH Migrant workers break police barricades at Uttar Pradesh-Madhya Pradesh border in Chakghat area of Rewa to enter into Uttar Pradesh. pic.twitter.com/GeerWaWzem
— ANI (@ANI) May 17, 2020Advertisement
இதனால் இன்றும் கூட வெளிமாநிலத்தவர்கள் தங்களின் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில இடங்களில் அவர்களைத் தடுத்து நிறுத்தும் காவல்துறையினர் அவர்களைத் திரும்பிச் செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரப் பிரதேச- மத்தியப் பிரதேச எல்லையில் வெளிமாநில தொழிலாளர்களைத் தடுக்கும் விதமாகத் தடுப்புகள் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் அங்கு வந்த நூற்றுக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் தடுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டுக் கடந்து சென்றுள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக வீடியோ ஒன்றை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?