இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லோரும் கோயில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர். மக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்வர். ஆனால் இந்தாண்டு ஊரடங்கு காரணமாக கோயில்களுக்கு யாரும் செல்லவில்லை. அதேசமயம் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
— Rajinikanth (@rajinikanth) April 14, 2020Advertisement
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!