டிடிவி தினகரனுக்கு கட்சிப் பணிகளை மேற்கொள்ள உரிமை உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் ஜாமீனில் விடுதலையான டிடிவி தினகரன் சென்னை புறப்படும் முன் டெல்லி விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது கட்சியில் இருந்து தன்னை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கட்சிப் பணிகளை மீண்டும் தொடர்வேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரன் மீண்டும் கட்சிப் பணி தொடர உள்ளதாக கூறியிருப்பது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிம் கேட்டபோது, "டிடிவி தினகரனை யாரும் நீக்கவில்லை. அவரே தான் விலகிக் கொள்கிறேன் என தெரிவித்தார். கட்சிப் பணி மேற்கொள்ள டிடிவி தினகரனுக்கு உரிமை உண்டு. இது அவரவர்களின் விருப்பம்" என்றார். இதேகேள்வி ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் கேட்கப்பட்டது. அதற்கு டிடிவி தினரகன் கட்சிப் பணி தொடர்வது குறித்து முதலமைச்சர் தலைமையில் முடிவு எடுக்கப்படும் என்றார்
Loading More post
இந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’!
“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
முகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்
6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை