குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பியிருந்த மழைநீரில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பனையூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியின் தெருக்களில் 3 முதல் 5 அடி ஆழம் வரை பள்ளம் எடுத்து, அதில் மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெய்த மழையால் தண்ணீர் எடுக்கும் பள்ளத்தில் நீர் நிறைந்திருந்தது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை சஞ்சீவினா தவறி விழுந்தது. காப்பாற்ற யாரும் இல்லாததால் அந்த குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தது.
இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது குழந்தை நீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தேவையை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து கொடுத்திருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?