இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை, தங்களது ஆர்ப்பிட்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. அதன்படி, நாசாவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் தரையிரங்கியதாக கூறப்படும் இடத்தை புகைப்படம் எடுத்துள்ளது.
இதனை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் கடினமாக இறங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விக்ரம் லேண்டரை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புகைப்படங்கள் நிலவின் மாலை நேரத்தில் எடுக்கப்பட்டதால், அதில் விக்ரம் லேண்டர் இருப்பது தெரியவில்லை. நிழல் படிந்துள்ள இடங்களில் லேண்டர் இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் மீண்டும் ஆர்பிட்டர் இதே இடத்திற்கு வரும் போது வெளிச்சம் இருக்கும் என்பதால், அப்போது கூடுதல் புகைப்படம் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Loading More post
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
கர்நாடகா: சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!