அசாம் மாநிலம் குவஹாத்தியிலுள்ள ஹோட்டல்களின் கழிப்பறைகள் இனி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொது கழிப்பறையாக செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் குவஹாத்தியில் மாநகராட்சி நிர்வாகம் ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி இனிமேல் குவஹாத்தியில் ஹோட்டல்களிலுள்ள கழிவறைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும். அதாவது அனைத்து ஹோட்டல்களும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இலவசமாக பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குவஹாத்தி நகரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்ததாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முடிவை அமல்படுத்தாத ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த உத்தரவுக்குள் நட்சத்திர ஹோட்டல்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!