குடியிருப்பு பகுதிக்குள் குட்டி கரடியுடன் புகுந்த தாய்க்கரடி 5 பேரை தாக்கியதால் மக்கள் அச்சமடைந்த சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள தர்மாரம் கிராமத்தில் தாய் கரடி மற்றும் குட்டிக் கரடி திடீரென குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. இரண்டு கரடிகளும் அப்பகுதியில் வசிக்கும் ராஜி, நரசிம்மா, பெத்தப்பா உள்ளிட்ட 5 பேரை தாக்கின. பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கரடியைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர்.
ஆனால், கரடி அங்கிருந்த முட்புதருக்குள் சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கரடிகளைப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Loading More post
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை