பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஈராக் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
கோடை விடுமுறை என்றால் சிறுவர்கள் வீட்டுக்குள் பெரும்பாலும் தங்க மாட்டார்கள். வெளியில் சுற்றிக்கொண்டு எதாவது விளையாடிக்கொண்டு பொழுதை கழிப்பார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. வீட்டை விட்டு வெளியவே செல்ல மறுக்கிறார்கள். கையில் செல்போன்களை வைத்துக்கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளிலேயே மூழ்கி கிடக்குகிறார்கள்.
ஆன்லைன் விளையாட்டும் வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் மன ரீதியாகவும் அவர்களை பாதிக்கிறது. விளையாடுபவர்களை அடிமைப்படுத்தும் அளவுக்கு ஆன்லைன் விளையாட்டுகளால் பிரச்னை உருவாகிறது. இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் பல அரசுகள் முக்கிய பிரச்னையாகவே கவனம் செலுத்தி வருகின்றன.
குறிப்பாக பலரும் அடிமைப்படுத்தும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய பல நாட்டு அரசுகளும் யோசித்து வருகின்றன. இந்தியாவில் பப்ஜி விளையாட்டை குஜராத் அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்ய தீவிரமாக யோசித்து வருகின்றன. நேபாள அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஈராக் அரசும் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாலும், விளையாடுபவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகள் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?