உலகின் சிறந்த பேட்ஸ்மேன், விராத் கோலிதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுடன் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபார சதமடித்த விராத் கோலி, 160 ரன்கள் குவித்தார். இதையடுத்து அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மியான் தத் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ’கோலியின் வலுவான பேட்டிங் டெக்னிக்கும் திறமையும் இக்கட்டான நிலையில் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து வருகிறது.
ஒரு பேட்ஸ்மேனின் டெக்னிக் மோசமாக இருந்தால் ஒரு சில போட்டிகளில் அதிக ரன் குவிக்கலாம். ஆனால் கோலியின் டெக்னிக் வேறு. அவர் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். பந்துவீச்சாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அவர் உடனடியாக அறிந்துகொள்கிறார். அவர் ஜீனியஸ். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான்’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!