சென்னை வில்லிவாக்கம் பாரதிநகரில் நேற்றிரவு காணாமல் போன 3 வயது பெண் குழந்தை, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன் - ஜெயந்தி. இவர்களின் 3 வயது மகள் காவ்யா. நேற்றிரவு மழை பெய்ததால், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தாய் ஜெயந்தி அருகிலுள்ள கடைக்குச் பொருட்கள் வாங்க சென்றிருக்கிறார். பின் கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் குழந்தை இல்லை. இதனால் பதறிப்போன ஜெயந்தி, வீடு முழுக்க குழந்தையை தேடிவிட்டு உறவினர்கள் உதவியுடன் அக்கம்பக்கத்திலும் தேடியிருக்கிறார். அப்படியிருந்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வில்லிவாக்கம் காவல்துறையில் ஜெயந்தி புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினரும் குழந்தையை தேடி வந்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று காலை வீட்டின் பின்புறமுள்ள குப்பைமேட்டிலிருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. பின்பு அது ஜெயந்தியின் மகள் காவ்யா என்று கண்டறியப்பட்டது. குழந்தை மீட்கப்பட்ட போது குழந்தையின் வாயில் நுரைத்தள்ளியடி இருந்திருக்கிறது. இதனால் குழந்தையை யாரேனும் கொலை செய்தார்களா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி