வர்த்தக பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று வர்த்தகத்தை துவக்கியவுடன் 387.96 புள்ளிகள் அதிகரித்து 32,995.28 புள்ளிகளையும், நிப்டி 113.45 புள்ளிகள் உயர்ந்து 10,321.15 புள்ளிகளையும் தொட்டது. சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 33,000 புள்ளிகளைக் கடந்து 33,117.33 மற்றும் நிப்டி 10,340.55 புள்ளிகளையும் தொட்டன. இதுவரை சென்செக்ஸ் 32,699.86 மற்றும் நிப்டி 10,251.85 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. இன்று இந்திய பங்குச்சந்தைகள் புதிய சாதனையைப் படைத்துள்ளன. இதனால் இன்று எஸ்பிஐ வங்கியின் பங்கு மதிப்பு மட்டும் 24 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நிப்டியில் இடம் பெற்று இருக்கும் ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகளின் பங்கு மதிப்பும் அதிகரித்துள்ளது. அதேபோல் இன்னும் 2 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு ரூ.2.11 லட்சம் கோடி உயர்த்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? : ஆளுநர் தமிழிசை விளக்கம்
இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2023 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாடுகளுக்கு இடையே தினசரி 4 காட்சிகள்: தியேட்டர்களின் புதிய அட்டவணை
சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரை மின்சார ரயில் சேவை ரத்து
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்