சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கள் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தினால் நோயாளிகளை மருத்துவர்கள் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் கொசு தொல்லையும் அதிகம் இருப்பதால் நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?