கட்சியிலிருந்து தன்னை நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி தினகரன் என்று வைத்திலிங்கம் புதியதலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 5 வருடம் முடிவதற்குள் தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டாலும், தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அறிவித்துவிட்டோம். சசிகலா சிறையில் இருப்பதால் அவர் இயங்க முடியாது. அப்படி செயல்பட்டால் அது சட்டப்படி குற்றம்” என்று கூறினார்.
நேற்று நடைபெற்ற இணைப்பு விழாவின் போது சசிகலாவை நீக்க வேண்டும் என நீங்கள் கூறியதுதான் டிடிவி தினகரனின் இந்த அறிவிப்புக்கு காரணமா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்று வைத்திலிங்கம் பதிலளித்தார்.
மேலும், “மெஜாரிட்டியை எங்களால் நிரூபிக்க முடியும். பொதுக்குழு கூடி சசிகலாவையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும். இழந்த சின்னத்தை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். 19 பேர் விலகிச் சென்றது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 99.9 சதவிகிதம் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். ஓரிரு நாட்களில் டிடிவி பக்கம் சென்ற எம்.எல்.ஏக்கள் மனம் மாறி இங்கு வர வாய்ப்புகள் உள்ளன” என்று அவர் கூறினார்.
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?