'எங்கே நல்ல நூல்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்' - என்று செகுவாரா சொன்ன வார்த்தைகளை மெய்ப்பித்த, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நூலக அழிப்பான 'யாழ் நூலக அழிப்பு' நடந்த தினம் இன்று.
கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பிறந்த சில நிமிடங்களில், நள்ளிரவில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக இருந்த, இலங்கையின் யாழ் நூலகம் சிங்கள பேரினவாத வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டது. இந்த வன்முறையில் 97,000 அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆரம்பகால கையச்சுப் பிரதிகள் தீக்கிரையாகின. இவற்றில் பெரும்பாலானவை தமிழில் எழுதப்பட்டவையாகவும் தமிழ் வரலாறு குறித்தவையாகவுமே இருந்தன.
1933ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு, 1959ல் முதல் கட்டடம் கட்டப்பட்டு படிப்படியாக வளர்ச்சி அடைந்த யாழ் நூலகம் ஒரே நாள் இரவில் எரிந்து சாம்பலானது உலக அளவில் 'ஒரு நூலகத்தின் படுகொலை' - என்று கண்டிக்கப்பட்டது. இலங்கையில் தமிழ்த் தேசியப் போர் தோன்ற இதுவும் ஒரு காரணமானது.
இன்னும் யாழ் நூலகத்தில் அழிந்த நூல்களில் பல நமக்கு மீண்டும் கிடைக்காத நிலையில், யாழ் நூலக அழிப்பு தமிழ் மக்களின் மிகப்பெரிய இழப்பாகவே நினைவுகூறப்படுகிறது.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!