கட்டட பணிகள் செய்தும், மூதாட்டிகளின் காலில் விழுந்தும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி, மீனாட்சிபுரம், சவுடார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்பி.உதயகுமார், அங்கிருந்த மூதாட்டிகளின் காலில் விழுந்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் புதிதாக கட்டப்படும் கட்டிடத்திற்கு தண்ணீர் தெளித்து கட்டிட பணியாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அதன்பிறகு மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் உங்கள் இல்லங்களில் சேர்ப்பது எங்களின் கடமை.
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வாஷிங்மிஷின், சிலிண்டர் வழங்கும் கோப்பில் கையெழுத்திடுவதே முதல்வரின் முதல் பணியாக இருக்கும், திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு புரியாது, அதனை படித்து முடிப்பதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும் என்று பேசினார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!