இந்தியாவுக்கு பாகிஸ்தானை விட சீனாதான் பெரிய அச்சுறுத்தல் என்றும், அதனால் சீன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமாஜ்வாதிக் கட்சியின் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் இதுதொடர்பாகப் பேசிய முலாயம், சிக்கிம் மாநிலத்தின் தோக்லாம் பகுதியில் சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், திபெத்தின் விடுதலைக்கு மத்திய அரசு வெளிப்படையான ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்றும், சீனப்பொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் முலாயம்சிங் யாதவ் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானால் இந்தியாவை எதுவும் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானை விட சீனாவே நமது நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றார். இதைத் தாம் கடந்த 20 வருடங்களாகக் குறிப்பிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கி சீனா ஆதரவு தெரிவித்து வருவதாகவும், இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் முலாயம்சிங் யாதவ் பேசினார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி