ஜெயலலிதா, கலைஞர் என இரு பெரும் தலைவர்கள் இல்லாத வருகின்ற தேர்தல் எல்லா கட்சிகளுக்கும் புதுத் தேர்தல்தான், முதல் தேர்தல் தான் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ''எங்களது செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுத்த பிறகு தேமுதிக தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கும். தற்போது 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.ஜெயலலிதா, கலைஞர் என இரு பெரும் தலைவர்கள் இல்லாத வருகின்ற தேர்தல் எல்லா கட்சிகளுக்கும் புதுத் தேர்தல்தான் - முதல் தேர்தல் தான். எல்லோருக்கும் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. எனவே இந்த தேர்தல் ஒரு மாற்றமான தேர்தல் தான்.
ஏற்கெனவே நாங்கள் தனியாக தேர்தல் களம் கண்டவர்கள். கட்சி ஆரம்பித்து 16 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு தேர்தல் பிரசாரம் பெரிய விஷயமில்லை. ஆதலால் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம்'' என்றார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'