நாகையில் மின்சாரம் தாக்கியதில், மகளின் கண்ணெதிரே தந்தை உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் போலகத்தைச் சேர்ந்தவர் பிலிப்தாஸ். இவர் நாகை மாவட்டம் செல்லூர் கிராமத்தில் உள்ள தனது மகள் ஜெசிந்தாமேரியை பார்ப்பதற்காக இன்று அவரது வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் வாசல் பகுதியில் இருந்த தென்னை மரத்தில் ஏறிய பிலிப்தாஸ், மரத்திலிருந்த தென்னங்கீற்றுகளை கத்தியினால் வெட்டி கொண்டிருந்தார். அப்போது தென்னை மரம் அருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரம் திடீரென்று பிலிப்தாஸ் மீது பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் பிலிப்தாஸ் தனது மகள் கண்ணெதிரிலேயே பரிதாபமாக தென்னை மட்டையின் இடையில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்புத்துறை வீரர்கள் உயிரிழந்தவரின் உடலை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். தொடர்ந்து பிலிப்தாஸின் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்