திருவள்ளூரில் குடியிருப்பு பகுதிகளில் குடித்துவிட்டு கலாட்டா செய்தவர்களைக் காவல் துறையினர் விரட்டி விரட்டி கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரம் கூட்டுச் சாலையில் நேற்று முதல் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு மது வாங்க வருபவர்கள் தங்களது வாகனங்களைச் சாலை ஓரங்களிலும், அங்குள்ள சாய் கிருபா நகர் குடியிருப்பு பகுதியிலும் நிறுத்தியுள்ளனர். இது மட்டுமன்றி அந்தக் குடியிருப்பு பகுதிகளிலேயே அமர்ந்து மதுபானத்தையும் அருந்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கு வந்த மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் தலைமையாலான காவல் துறையினர், சாய் கிருபா நகர் குடியிருப்பில் அமர்ந்து மது அருந்தியவர்களை விரட்டி விரட்டி கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தை காஞ்சிபுர சரக டிஐஜி தேன்மொழி ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!