காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியில் பரமபதம் விளையாடிய கும்பல் போலீஸாரின் ட்ரோன் கேமராவை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.
காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் வசித்து வந்த பகுதியைக் கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து 9-வார்டு உள்ளடக்கிய 65 தெருக்கள் அனைத்தும் இரும்பு தகரத்தால் சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் தடுப்பு வேலியை தாண்டி வெளியே வரக்கூடாது எனவும், வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் காவல்துறையினர் சார்பாக கட்டுப்பாட்டு மண்டலம் பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆள் நடமாட்டம் எதுவும் இருக்கிறதா என கண்காணிக்கப்பட்டது. அப்போது ட்ரோன் கேமராவில் அப்பகுதி இளைஞர்கள் சாலையின் நடுவே கும்பலாக அமர்ந்து பரமபதம் விளையாடியது தெரிந்தது. அவர்களை நோக்கி ட்ரோன் கேமரா செலுத்தப்படுவதை அறிந்த இளைஞர்கள் உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை வீட்டில் விடும் வரை தொடர்ச்சியாக ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் விரட்டினர். இந்த வீடியோவை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அத்துடன் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருக்கும் யாரும் அஜாக்கிரையாக நினைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!