சென்னை அடுத்த புழல் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த புழல், கஸ்தூரி நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான சுந்தர். இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் கோவை சென்றுள்ளார். இதையடுத்து இன்று சுந்தர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சுந்தரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அப்போது ஊருக்குச் செல்லும் முன்பு வீட்டில் 50 சவரன் தங்க நகைகள், மற்றும் 20 ஆயிரம் பணம் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பணமும் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!