தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.பி.அணை வேகமாக நிரம்பி வருகிறது.
கடந்த ஆறுமாதங்களாக போதிய மழை இல்லாததால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு மற்றும் ஒசூர் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கெலவரப்பள்ளி அணையில் மொத்த கொள்ளவான 44 அடியில் தற்போது 42 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீர் உபரிநீராக ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கே.ஆர்.பி.அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்து உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 560 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 42 கனஅடியாக உள்ளது. 40 அடியாக நீர்மட்டம் உயர்ந்தால் கால்வாய் மூலமாக ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!