சென்னை வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ வழித்தடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
விரைவான பயணத்திற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையே 10.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ வழித்தடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. சுரங்கப்பாதை தரையில் இருந்து சுமார் 90 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 25 அல்லது 26ஆம் தேதி ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தெரிகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்