பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கிளிப்டன் பிளாக் 4 பகுதியில், சீன தூதரகம் உள்ளது. இதன் அருகில் குவைத், ரஷ்ய தூதரகம் மற்றும் பள்ளிகள், ரெஸ்டாரென்டுகள் இருக்கின்றன. சீன தூதரகத்துக்கு இன்று காலை ஆயுதங்களுடன் வந்த நான்கு பேர் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர்.
Read Also -> ''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' - வைரலான பள்ளிக்குழந்தையின் குறிப்பு!
அப்போது திடீரென்று அந்த நால்வரின் ஒருவன் குண்டை வெடிக்கச் செய்தான். பின்னர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அங்கு நடந்துள்ளன. இதில் பாதுகாப்புக்கு நின்ற 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Read Also -> நடுவானில் போன் நம்பர் கேட்டு விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!
சீன தூதரக துணை அதிகாரி கூறும்போது, தூதரகத்துக்குள் நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். சம்பவ நடந்த இடத் துக்கு அருகில் வசிக்கும் செய்தியாளர் ஒருவர், ‘சில நிமிடங்களாக துப்பாக்கி சத்தத்தை நாங்கள் கேட்டோம். என்ன நடந்தது என்பதை உடன டியாக புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்தார்.
Read Also -> மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி!
அந்த பகுதியில் கரும்புகை மேலெழுந்து செல்வதையும் புல்லட் சத்தங்கள் அதிகமாக கேட்பதையும் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பி வருகின் றன. மேலதிக விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
சமீபத்தில் வந்த தகவலின் படி ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது என்றும் போலீசார் குவிக்கப் பட்டதை அடுத்து அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ’இன்னும் சண்டை முடியவில்லை. தப்பியோடிய வர்கள் அருகில்தான் இருப்பார்கள் என்பதால் அவர்களைத் தேடும்பணி நடந்துவருகிறது’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி