தாய், தந்தையை இழந்து வறுமையால் வாடிவந்த பெண்ணுக்கு, குடும்ப நிலையை கருதி அரசுப்பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவண்ணாமலையில் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று உதவிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்திற்குள் நுழைந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை அனைவரும் பரபரப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த வாகனம் ஒரு சிறிய வீட்டின் முன்பு நின்றது. அந்த வீட்டிற்குள் நுழைந்த ஆட்சியர் கந்தசாமி, வீட்டின் மூத்த பெண்ணான ஆனந்தியையும், அவரது தம்பி, தங்கையையும் சந்தித்து பேசினார். அத்துடன் அவர்களுடனேயே ஆட்சியர் உணவு உண்டார். பின்னர் ஆனந்திக்கு சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.
சத்துணவு உதவியாளராக இருந்த தாய் இறக்கும்போது ஆனந்தி பிளஸ் டூ படித்துவந்தார். தாயின் இறப்பை அடுத்து கடந்த ஆண்டு தந்தையும், கடந்த ஆகஸ்ட் மாதம் பாட்டியும் இறந்துவிட்டார். இதனால் வறுமை அந்தக் குடும்பத்தை ஆட்டிப்படைத்தது. இதையெல்லாம் கூறி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம், கண்ணீருடன் ஆனந்தி மனு அளித்தார். இந்தக் குடும்பத்தின் நிலை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்பேரில், 19 வயது ஆனந்திக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தியின் தங்கை கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனந்தியும் தொலைதூரக் கல்வி படிக்க கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டு, இவர்களுக்கு வீடு கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆனந்தி நேற்று முதல் கனிகிலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!