ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் கிரண் சங்வியின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மும்பையில் கடந்த வாரம் காணாமல் போன ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் கிரண் சங்வியின் உடல் மும்பை அருகே மீட்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய 39 வயதான ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் சங்வி, வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
அடுத்த நாளே நவி மும்பை அருகே சித்தார்த்தின் கார் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் ரத்தகறையும் கத்தியும் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தானேவின் கல்யாண் பகுதியில் சித்தார்த்தின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சித்தார்த் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகப்படும் காவல்துறையினர் 20 வயதான சர்ஃபாரஸ் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சித்தார்த்தின் வளர்ச்சியை பிடிக்காமல் உடன் பணியாற்றுபவர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்