விருகம்பாக்கத்தில் பிரியாணிக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த திமுகவைச் சேர்ந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். அன்பு பிரியாணிக் கடைக்கு சிலர் உணவு உண்ண வந்தனர். அப்போது பிரியாணிக் கேட்டு அவர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரமாகி விட்டதால் பிரியாணி இல்லையென கடைக்காரர்கள் கூறவே, வந்திருந்தவர்கள் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து கடையின் மேலாளர் அருண் ஜஸ்டின் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
விசாரணையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணிக் கடை ஊழியர்களை தாக்கியது தெரியவந்தது. யுவராஜ் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. மேலும் யுவராஜ் பாக்ஸர் போல் பிரியாணிக் கடைக்காரரை எம்பி எம்பித் தாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து யுவராஜ் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பிறகு திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் இந்தக் கடைக்கு சென்று நடந்தவற்றை கேட்டறிந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் யுவராஜின் நண்பர்கள் ராம், கார்த்திக், கிஷோர், ருத்ரகுமார், கார்த்திக் மற்றும் கல்லூரி மாணவர் சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், திவாகர் மற்றும் சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டுவந்த யுவராஜ் இன்று மதியம் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Loading More post
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!