சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நேற்று இரவு முழுவதும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கருணாநிதியை அடக்கம் செய்த இடத்தில் கிரானைட் கற்கள் பதித்த மேடை அமைக்கப்பட்டு, அதனைச் சுற்றி தரைதளத்தில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிரானைட் கற்களால் ஆன மேடையின் மீது சூரிய வடிவில் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நாளாக இன்று காலையிலிருந்தே தொண்டர்களும், பொதுமக்களும் வரிசையில் நின்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருணாநிதியின் நினைவிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide