சென்னை திருவொற்றியூர் ரயில்நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணிக்காக பொக்லைன் மூலம் மணல் கொட்டிய போது, அப்பகுதியாக வந்த இளைஞர் மணலில் சிக்கி உயிரிழந்தார்.
ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். திருவொற்றியூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளும் பணிகள் நடந்து வருகின்றன. அப்போது அந்தப் பகுதியாக வந்த விஜயகுமார் மீது மணல் கொட்டப்பட்டதாக தெரிகிறது. விஜயகுமார் மீது கல் மற்றும் மணல் கொட்டியதால் அவர் மூச்சுதிணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இதனை கவனிக்காத பொக்லைன் ஓட்டுநர் மேலும் மண் கொட்ட முயற்சித்த போது, அங்கு கூடியிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனையடுத்து உடனே அங்கு இருந்தவர்கள் விஜயகுமாரை மீட்ட போது அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்