அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உள்ளது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட காரை, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் அண்மையில் ஒப்படைத்திருந்தார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. மேலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்த நாஞ்சில் சம்பத், தான் அக்கட்சியில் தொடர்வதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உள்ளது என கூறியுள்ளார். அன்பிற்குக் கட்டுப்பட்டு பொதுவாழ்வில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
கட்சியில், சுதந்திரமாக செயல்படுமாறு சசிகலா அறிவுறுத்தியதாக கூறியுள்ள நாஞ்சில் சம்பத் சசிகலா தலைமையில் சுதந்திரம் கிடைப்பதை உணர்வதாகவும் கூறியுள்ளார். கட்சியில் புதிதாக பொறுப்பு எதுவும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ள நாஞ்சில் சம்பத், உள்ளாட்சித் தேர்தலுக்காக உழைப்பேன் எனவும் கூறியுள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!