2018-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத் தாள்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ உறுதிபட தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்காக இந்தாண்டு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாவும், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எளிமையான முறையில் வினாக்கள் அமைந்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதேபோல், பிராந்திய மொழிகளில் அமைந்திருந்த வினாத் தாள்களுக்கும், ஆங்கிலம், இந்தி மொழிகளில் அமைந்திருந்த வினாத்தாள்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. அந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ சார்பில் பல்வேறு உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொழி சார்ந்த விஷயங்களில் சில குளறுபடிகள் இருந்திருக்கின்றன. இனி அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?