Published : 10,Dec 2017 03:25 AM
கர்நாடகாவில் கரை சேர்ந்த 453 மீனவர்கள் திரும்புகின்றனர்!

ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கர்நாடகாவில் கரை சேர்ந்த 453 மீனவர்கள் தமிழகம் திரும்புவதாக அரசு தெரிவித்துள்ளது.
ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கர்நாடக மாநில கடற்கரை பகுதியான மால்பேயில் 120 படகுகளில் 327 மீனவர்கள், கார்வார் பகுதியில் 9 படகுகளில் 126 மீனவர்கள் என மொத்தம் 453 மீனவர்கள் கரை சேர்ந்ததாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 453 மீனவர்களுக்கும் உடனடி நிர்வாரண உதவித்தொகையாக தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 9 லட்சத்து ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை, உணவு வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் படக்களுக்கு தேவையான் எரி பொருள் வழங்கப்பட்டு அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு செலல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.