ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட இருந்த அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ள நிலையில், புயலுக்கு ‘ஒகி’ என பெயரிடப்பட்டுள்ளது. ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன. எனவே பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கன்னியாகுமரி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட இருந்த அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமான ஏராளமான மரங்கள் தண்டவாளங்களில் விழுந்து கிடப்பதால் ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தண்டவாளங்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'