கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலங்கள், மணல் கொள்ளையால் வெளியே தெரிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திட்டக்குடியை அடுத்த கொடிகுளம் ஊராட்சி மக்களுக்கு, வெள்ளாற்றின் கரையோரம் இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடுகாட்டின் வழியாக சிலர் ஆற்று மணலை கடத்தி வருகின்றனர், இதனை பயன்படுத்தி செங்கல் சூளைக்காக கரையில் உள்ள மணலையும் சிலர் சுரண்டி எடுத்து சென்றுள்ளனர். தற்போது மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சுடுகாட்டில், சமீபத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் மற்றும் எலும்பு கூடுகள் வெளியில் தெரிகின்றன.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் புதைக்கப்பட்ட தங்கள் மூதாதையர்களின் சடலங்களை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
பூந்தமல்லி: கழன்று தொங்கும் பேனர்கள்; விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!