Published : 09,Jul 2022 08:34 AM
தேனி: ரோந்து பணியின்போது சிக்கிய 1 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

மயிலாடும்பாறை அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் கிலோ கஞ்சாவை பறிமுதல்; செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை போலீசார் காமன்கல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கொங்கரவு கிராமத்தில் கஞ்சா மற்றும் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்றனர்.
அப்போது கெங்குரேவு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் சுமார் 1 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.