குடவாசல் அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 15 வயது சிறுமி, தனது தாத்தா பாட்டியுடன் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமியின் மாமா திருமாவளவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதைத் தொடர்ந்து, திருமாவளவன் அந்த சிறுமியை அழைத்துச் சென்று அருகில் உள்ள கோவிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சிறுமி மற்றும் அவரது தாயார் மீது நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருமாவளவனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்