பட்டுக்கோட்டையில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில், பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தையொட்டி, இன்று காலை பிறந்து சிலமணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கை, கால்கள் துண்டித்த நிலையில் கிடந்துள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த உடலை கைப்பற்றிய நிலையில் இந்த பச்சிளம் குழந்தையின் உடல் இங்கு எப்படி வந்தது? யார் கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றிருப்பார்கள்? என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குழந்தையின் உடல் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கிடந்ததால் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் ரயில்வே தண்டவாளம் அருகே மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'