உலகம் முழுவதும் உருமாறிய கொரோனாவான ஓமைக்ரான் வேகமாக பரவிவரும் நிலையில் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி பற்றிய விழிப்புணர்வின்றி கல்லூரி மாணவர்கள் சுற்றித் திரிவதும், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்றுவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா மாறுபாடு வைரஸான ஓமைக்ரான் குறித்த அச்சமின்றி பெரும்பாலான மாணவர்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றித் திரிகிறார்கள். மேலும் திருவிக கலைக் கல்லூரி வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகளில் பயமின்றி படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஏற்கெனவே அரசு படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
ஆனாலும் அவர்களின் அறிவுரையை கேட்காமல் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அச்சமின்றி படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்றும், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.
வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டு; போலீசார் விசாரணை
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!