உலகம் முழுவதும் உருமாறிய கொரோனாவான ஓமைக்ரான் வேகமாக பரவிவரும் நிலையில் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி பற்றிய விழிப்புணர்வின்றி கல்லூரி மாணவர்கள் சுற்றித் திரிவதும், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்றுவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா மாறுபாடு வைரஸான ஓமைக்ரான் குறித்த அச்சமின்றி பெரும்பாலான மாணவர்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றித் திரிகிறார்கள். மேலும் திருவிக கலைக் கல்லூரி வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகளில் பயமின்றி படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஏற்கெனவே அரசு படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
ஆனாலும் அவர்களின் அறிவுரையை கேட்காமல் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அச்சமின்றி படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்றும், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.
வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டு; போலீசார் விசாரணை
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்