தூத்துக்குடியில் தரைதட்டிய 'பார்ஜ் கப்பல்' 3 விசை படகுகள் மூலம் மீட்கப்பட்டு, தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு, கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு ஜல்லி, பாறை கற்கள் போன்ற சரக்குகளை கொண்டு செல்வதற்காக 'பார்ஜ்' எனப்படும் பெரிய வகை கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இது சுமார் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ளது. இது நேற்று மாலத்தீவில் சரக்குகளை இறக்கிவிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அருகாமையில் வந்தது. பின் இழுவை கப்பலின் மூலம் துறைமுகத்திற்கு உள்ளே இழுத்துக் கொண்டு வரும் போது கடல் சீற்றத்தாலும் அதிக காற்று வீசியதாலும் பார்ஜில் கட்டியிருக்கும் கயிறு அறுந்து விழுந்தது.
இதனால் காற்றின் போக்கில் இழுத்து செல்லப்பட்ட பார்ஜி கப்பல், தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அருகே உள்ள இனிகோ நகர் பகுதியில் நேற்று தரை தட்டியது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 3 மீன்பிடி விசைப் படகுகளின் மூலம் கயிறுகளை கட்டி சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பெரிய வகை பார்ஜ் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் பழைய துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அப்பகுதி மீனவ பெண்கள் கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!