இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. எரிமலை சாம்பலுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளதால் இறந்துள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் லுமாஜங் மாவட்டத்தில் உள்ள செமெரு எரிமலை நேற்று கடுமையாக சீறி தீக்குழம்பை கக்கியது. விண்ணை முட்டும் அளவுக்கு எரிமலை புகை எழுந்தது. இதில், தீக்காயம் பட்டு 13 பேர் உயிரிழந்த நிலையில் மற்ற நபர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
ஒரு கிராமம் முழுவதும் எரிமலை சாம்பல் படிந்துள்ளது. எரிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். சாலைகளிலும் கட்டடங்களிலும் வாகனங்களிலும் எரிமலை சாம்பல் படிந்து காணப்படும் நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழையும் பெய்துள்ளதால் எரிமலை சாம்பலில் நீர் கலந்து அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
Aftermath video- A #volcano on the #Indonesian island of Java, erupted on #Saturday, #killing at least 13 person, injuring dozens of others and causing thousands to flee.#Lumajang, #Indonesia's #Semeru #volcano#semeruerupsi #SemeruEruption #SemeruVolcano pic.twitter.com/edKz8A0CaI — Journalist Siraj Noorani (@sirajnoorani) December 5, 2021
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!