சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயர் ரக வாகனங்களை திருடிய கொள்ளை கும்பலைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் தப்பியோடினர்.
சென்னை குமரன் நகர் அருகே குடியிருப்பு பகுதியில், உயர் ரக 'கே.டி.எம்' இருசக்கர வாகனத்தை திருடி 3பேர் ஓட்டிசெல்வது தெரியவந்தது. பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் அசோக் நகர் ஆஞ்சிநேயர் கோவில் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது 3 பேரை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். அப்போது, இரண்டு பேர் தப்பியோடிவிட்டனர். பிடிப்பட்ட 17வயது சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், 'கிண்டி, சைதாப்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் முன்பிருக்கும் உயர் ரக வாகனங்களை திருடிச் செல்வோம்' என சிறுவன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், 'அந்த வாகனங்களை, ஆளில்லா பார்க்கிங் பகுதிகளில் நிறுத்திவிட்டு, சில நாட்கள் கழித்து அதனை வெளியூர்களுக்கு விற்றுவிடுவோம்' என சிறுவன் கூறியது காவலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டார். மேலும் தப்பியோடிய இருவரும் அயனாவரம் மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராபர்ட் மற்றும் ஜான் என்பதும், அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: வெளியானது மணி ஹெய்ஸ்ட் 5வது பாகம் - நெட்ஃபிளிக்ஸில் முகாமிட்ட ரசிகர்கள்!
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!