சத்தியமங்கலம் அருகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற அதிகாரிகளின் வாகனத்தை காட்டு யானை வழிமறித்து நின்றது.
பவானிசாகர் தொகுதியில் அடர்ந்த மலைப்பகுதியில் உள்ள கோட்டமாளத்தில் வாக்குகள் பதிவான இயந்திரங்களுடன் அதிகாரிகள், கோபிசெட்டிபாளையம் நோக்கி பயணத்தைத் தொடங்கினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆசனூர் சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று குட்டியுடன் நின்றுகொண்டிருந்தது. 2 மணி நேரம் வரை அந்த தாய் யானையும் குட்டியும் நகராமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன. இதனால் அதிகாரிகளால் அந்த இடத்தை விட்டு முன்னேற முடியாமல் போனது.
2 மணி நேரத்துக்குப் பின் மனமிறங்கிய காட்டுயானை தனது குட்டியுடன் காட்டுக்குள் திரும்பியது. இதற்காக காத்துக் கொண்டிருந்த அதிகாரிகள் தங்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு கோபிசெட்டிபாளையம் வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றடைந்தனர்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்