தமிழக நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.
அதன்படி தமிழகத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையானது மே 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடந்து முடிந்து 26 நாட்களுக்கு பின்தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரைக்கும் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பு வீரர்களின் உதவியுடன் பத்திரமாக வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இவ்வளவு இடைவெளியா என ஒருதரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இந்த இடைவெளி இருந்ததாக சிலர் கூறுகின்றனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்றது. அதேசமயம் வாக்கு எண்ணிக்கையானது மே மாதம் 13-ஆம் தேதிதான் நடைபெற்றிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து சரியாக ஒருமாதத்திற்கு பின்தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றிருக்கிறது.
தமிழகத் தேர்தல் நடைபெறும்போது மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறுவதும் வழக்கம். வாக்கு எண்ணிக்கையானது ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நாளில்தான் நடக்கும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கெல்லாம் தேர்தல் நடந்து பிறகுதான் வாக்கு எண்ணிக்கையை நடத்த முடியும் என்பதற்காகத்தான் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை சற்று தாமதமாக நடைபெறுவதாக ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!