குஜராத் மாநிலத்தின் தாத்ரா நகர் ஹவேலி தொகுதியின் சுயேட்சை எம்பி ஆன மோகன் தெல்கர், திங்கட்கிழமை மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கியவாறு கண்டறியப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘’தெற்கு மும்பை மெரைன் டிரைவ் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் தெல்கரின் உடல் கண்டறியப்பட்டது. அவர் பக்கத்தில் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்த பல பக்கங்கள் அடங்கிய தற்கொலை கடிதம் ஒன்று இருந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது’’ என்று கூறினர்.
தெல்கரின் தற்கொலை கடிதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாததால் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
1989 மற்றும் 2009க்கு இடைப்பட்ட காலத்தில் 6 முறை யூனியன் பிரதேச மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தெல்கர். இதில் 1989,1991 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், 1998ஆம் ஆண்டு மட்டும் பாஜக சார்பாக போட்டியிட்டார். பிறகு 1999 மற்றும் 2004ஆம் ஆண்டு சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றார். 2009ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவினார். இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?