புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரி அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே மோதல்போக்கு நிலவி வந்த நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சித் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார்.
முன்னதாக, புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு காரில் வந்திறங்கிய அவரை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கு ஏற்கெனவே காத்திருந்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் வரவேற்றனர். முன்னதாக. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடியை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வழியனுப்பினர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி