சீர்காழியில் தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, ரயில்வே ரோடு பகுதியில் வசிப்பர் வடநாட்டைச் சேர்ந்த தன்ராஜ். இவர் அதேபகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறார். மேலும், மொத்த நகை வியாபாரியாகவும் இருந்து வருகிறார். இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில், தன்ராஜ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் 4 பேரையும் கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்ராஜும் அவரது மருமகள் நிகிலும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே தன்ராஜ் வீட்டில் இருந்து 17 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் காரையும் மர்ம கும்பல் திருடி சென்றிருந்தனர்.
இந்நிலையில், தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். எருக்கூறில் மற்ற 2 கொள்ளையர்களை பிடித்து அவர்களிடமிருந்து 17 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை