தமிழகத்தில் இரண்டாம் நாளாக இன்று காலை 10 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.
தமிழ்நாட்டில் முதல் நாளான நேற்று 2 ஆயிரத்து 945 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 166 மையங்களில் தலா 100 பேர் வீதம் 16 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்த முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் மிகக் குறைந்த சதவீத அளவிலான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்திருந்தனர்.
சென்னையில் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்பாக்கம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 50 முதல் 60 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். அதேசமயம் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள பலரும் தயக்கம் காட்டியதை காண முடிந்தது. பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மையங்களுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி