இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் வசித்து வரும் ஆஷிஷ் குமார் தம்பதி, பிறந்து 20 மாதமான தங்களது பெண் குழந்தை ‘தனிஷ்தா’-வை அங்குள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த 8 ஆம் தேதி சேர்த்துள்ளனர். அன்று மாலை குழந்தை வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக தவறி மேல் தளத்தில் இருந்து விழுந்துள்ளது.
குழந்தையை பரிசோத்தித்த மருத்துவர்கள் கடந்த 11 ஆம் தேதியன்று அவள் மூளை சாவு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“மருத்துவர்கள் அதை சொன்னதும் எனக்கு உயிரே போய்விட்டது. அதே நேரத்தில் அவள் ஐசியூவில் இருந்த போது சக பெற்றோர்கள் அவர்கள் குழந்தைக்கு தேவைப்படும் உடல் உறுப்புகள் குறித்து சொல்லியிருந்தனர். அதனால் அவளது உடலை மண்னில் புதைப்பதை காட்டிலும் உறுப்புகள் தேவைப்படுவோரின் உடலில் பொறுத்தலாம் என முடிவு செய்தேன். மருத்துவர்களிடம் இதை சொன்னதும் எனது குழந்தையின் உறுப்புகளை அவள் அனுமதிக்கப்பட்டிருந்த மருந்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்தனர். இப்போது அதன் மூலம் 5 பேர் உயிர்பிழைத்துள்ளனர்” குழந்தையின் தந்தை ஆஷிஷ் குமார்.
இதயம், கல்லீரல், சிறுநீரகம், கருவிழிப்படலம் முதலியவை குழந்தையிடமிருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த உறுப்புகள் தேவைப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு