கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றினால் உலக மக்கள் சொல்லமாளாத துயரத்திற்கு ஆளாகி இருந்தாலும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என கடல் கடந்து இருப்பவர்களையும் தொடர்பில் இருக்க உதவியது டிஜிட்டல் தொழில்நுட்பம் தான். அந்த வகையில் கடந்த ஆண்டின் கடைசி நாளன்று மட்டும் வாட்ஸ் அப்பில் சுமார் 140 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2019 உடன் ஒப்பிடும் போது அந்த ஆண்டில் பதிவாகியிருந்த வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை காட்டிலும் இம்முறை 50 சதவிகிதம் கூடுதலாக பதிவாகியுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் வாட்ஸ் அப்பின் தாய் வீடான ஃபேஸ்புக்கில் சுமார் 55 மில்லியன் லைவ் பிராட்கேஸ்ட் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளன.
கடந்த 2020 மார்ச் வாக்கில் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா பொதுமுடக்கமே இதற்கு காரணம் என சொல்லப்பட்டுள்ளது. “எந்தவித சிக்கலும் நிகழாமல் இருக்கவும். அப்படி நிகழ்ந்தால் அதை களையவும் பொறியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என புத்தாண்டு மாலை அன்று வலைப்பூவில் தெரிவித்திருந்தார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் டெக்னிக்கல் புரோகிராம் மேலாளர் கைட்லின் பென்போர்ட்.
புத்தாண்டு மாலை அன்று வாட்ஸ் - அப் மற்றும் ஃபேஸ்புக் பயன்பாடு அதிகரித்து இருப்பதை அந்த நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் 2021 ஆம் ஆண்டை செம ஹேப்பியாக அந்நிறுவனங்களின் நிறுவனர் மார்க் ஸூக்கெர்பெர்க் தொடங்கி உள்ளாராம்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!